பாலஸ்தாபனமும் புனருத்தான வேலைகள் பற்றிய அறிவிப்பு
அருள்மிகு விசாலாட்சிசமேத காசிவிஸ்வநாத சிவன் தேவஸ்தான பாலஸ்தாபனம் கடந்த சித்திரை மாதம் 25'ஆம் நாள் நடைபெற்றது. இதன்போது வைரவர் மண்டபம், யாகசாலை, வசந்தமண்டபம் என்பன பாலஸ்தாபனம் செய்யப்படது.
புதிய வசந்த மண்டபம் மற்றும் பாலஸ்தாபனம் செய்யப்பட்டவற்றிற்கு கடந்த வைகாசி மாதம் 4'ஆம் நாள் அத்திவாக்கல் இடப்பட்டு பல இடர்களுக்கு மத்தியிலும் புனருத்தான வேலைகள் வேகமாக நடைபெற்று வருகின்றது.
இப்புனருத்தான வேலைகளுக்கு சிவன்கோவிலடி இளைஞர்கள் முழு அர்ப்பணிப்புடன் சிவத்தொண்டாற்றி வருகின்றனர். இவ்வருட மஹா கும்பாபிஷேகமும் மகோற்சவ பெருவிழாவும் ஆனிமாதம் நடைபெறவுள்ளது. இதன் முழுவிபரங்களும் ஒருசில நாட்களில் அறியத்தரப்படும்.